Monday, January 6, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 18

ஆபத்பாந்தவனை வணங்குவோம்!



கோபம் விலக்கி குணநலம் கொண்டுய்ந்து
பாபம் விலக்கிப்பின் பக்தர் பணிசெய்து
தீபம் விளக்கித் தினமும் தொழுதேத்தி
நாபிக் கமலத்தில் நான்மு கனைவைத்த
கோபா லனை,புட்டப் பர்த்தி கிராமத்தின்
சாபம் விலக்கிய சத்திய சாயியை
ஆபத்தை நீக்கிடும் ஆனந்த ரூபனை
வா,பணிந் தேத்தி வணங்கேலோ ரெம்பாவாய்! (பாடல்-18)

கோபத்தைத் தவிர்த்து, நல்ல குணங்களைக் கொண்டு மேன்மையடைந்து, பாபச் செயல்களை விலக்கி, இறையன்பருக்குப் பணி செய்து, தீபத்தை நன்கு துலக்கி ஏற்றி, தினந்தோறும் உன்னப் போற்றித் துதிப்போம்.

இவன் தனது கொப்பூழில் வளர்ந்த தாமரையில் பிரம்மனை வைத்த கோபாலன்.

புட்டபர்த்தி பெற்ற சாபத்தை நிவர்த்தி செய்தவன்;

நமக்கு வரும் ஆபத்துகளை அறிந்து விலக்குகின்றவன்; ஆனந்தமே வடிவானவன்.

அப்படிப்பட்டவனை நாம் பணிந்து அன்போடு வணங்கலாம், வாரீர்!

No comments:

Post a Comment