Wednesday, January 8, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 25

கிருஷ்ணனே சாயி கிருஷ்ணன்!




பர்த்தி புரியில் பிறந்தாய் அருகிருந்த
கர்ணம்சுப் பம்மா மனையில் வளர்ந்தாய்
கருநிறக் கண்ணனாய் பூதகிநஞ் சுண்டனை
பர்த்தியில் நஞ்சுடைத் தின்பண்ட மெல்லாம்
ஒருவர்க்கும் தாரா தொருவனே தின்றாய்
கருவில் திருவே கருமணியே கண்ணில்
உருவே அருவே உவமை யிலாத
திருவின் திருவைத் தெரிந்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-25)

(ஈஸ்வராம்பா என்ற) ஒரு பெண்ணுக்கு மகனாகப் பிறந்தாய். ஆனால், கர்ணம் சுப்பம்மா என்ற மற்றொரு தாயின் வீட்டில் (கிருஷ்ணனைப் போலவே) வளர்ந்தாய். கருநிறக் கண்ணனாக இருந்தபோது பூதகியின் மார்பில் நச்சுப் பாலைக் குடித்தாய். பர்த்தியிலே நஞ்சு கலந்த தின்பண்டத்தை நண்பர்களுக்குத் தராமல் நீயே தின்று, அவர்களைக் காத்தாய்.

கருவிலே வளர்ந்த தெய்வீகச் செல்வமே, கண்ணில் பாவையே, உருக்கொண்டிருந்த போதும் உருவமற்றவனே, உவமைகூற இயலாத லக்ஷ்மி தேவிக்கே செல்வமான சாயி என்னும் திருவே, உன்னை நாங்கள் தெரிந்துகொண்டோம்!

Picture courtesy: saibabaofindia.com 

No comments:

Post a Comment