Thursday, August 8, 2019

சாயீ தாள் பணிவேன்!



நானே எனதே என்றெண்ணி
   நாதா நின்னை மறந்திட்டே
ஊனே வளர்த்தேன் உலகியலில்
   ஊறிக் கிடந்தேன் எனைமீட்டாய்
வானே மண்ணே வையகமே
   வகையாய்ப் படைத்த மாதவனே
தானே தன்னை அறியும்வகை
   தந்தாய் சாயீ தாள்பணிவேன்!