Saturday, November 16, 2019

போற்றி பஞ்சகம்!



பாம்பணையும் பாற்கடலும் போதா வென்றோ
பாம்பணையும் புற்றுமிகும் பர்த்தி வந்தாய்!
தேம்பிழியும் திருக்குரலால் தினமும் பேசி
சாம்பலினால் நோய்தீர்க்கும் சாயீ போற்றி!

பனிமலையும் பொற்சபையும் போதா வென்றோ
இனியநதி இழைந்தோடும் பர்த்தி வந்தாய்!
கனியமுதக் கண்விழியில் கருணை தேக்கி
மனிதரிடை அவதரித்த சாயீ போற்றி!

அறுபடையின் திருவீடு போதா வென்றோ
நறுமலர்கள் நனிசூழும் பர்த்தி வந்தாய்!
குறுநகையும் குதிநடையும் கூற்றந் தன்னைச்
செறுவிழியும் சிகையழகும்! சாயீ போற்றி!

அலைமகள்நின் அன்பரவர் இல்லம் சேர்ந்தாள்
மலைமகள்நின் பாதியுடல் ஆகிச் சேர்ந்தாள்
கலைமகள்நின் அன்பரவர் நாவிற் சேர்ந்தாள்
தலைமகனே தனியொருவ சாயீ போற்றி!

காணுவதும் நின்தோற்றம் கணம்வி டாமல்
பூணுவதும் நின்நாமம் நாவில், நெஞ்சில்
பேணுவதும் நின்னருளே, பிறவாப் பேற்றை
வேணுவதும் நின்னிடமே சாயீ போற்றி!

ஓம் ஸ்ரீ சாயிராம்