Showing posts with label ஞானேந்திரியம். Show all posts
Showing posts with label ஞானேந்திரியம். Show all posts

Monday, June 24, 2013

அருள்மொழி: ஆனந்தத்தின் மூலாதாரம்

ஓம் ஸ்ரீ சாயிராம்



ஆனந்தத்தின் மூலாதாரம் பகவானுக்கு அர்ப்பணமாக இருத்தலே. வேறெதுவுமே அத்தகைய சத்தியமான, நித்தியமான ஆனந்தத்தைத் தரமுடியாது. கடவுளுடன் உனது உறவை நினைவில் வைத்திரு.

அது ஏதோ நாட்டுப்புறக் கதையோ, தேவதைக் கதையோ, கட்டுக்கதையோ அல்ல. காலத்தின் தொடக்கத்திலிருந்து அவ்வுறவு உள்ளது. காலத்தின் முடிவுவரை அது நீடிக்கும்.

ஒவ்வொருவருவமே தர்ம மார்க்கத்தில் பிறந்து, கர்ம மார்க்கத்தில் பயணித்து, சாது மார்க்கத்தின் வழியே ஓடி பிரம்ம மார்க்கத்தை அடைகிறார்கள். சாது மார்க்கத்துக்கும், கர்ம மார்க்கத்துக்கும் ஞானேந்திரியங்கள் ஒளியூட்டுகின்றன. ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் மாசுபடாமல் வைத்திருங்கள்.

புல்லைத் தின்று கழுநீரைக் குடிக்கும் பசு, சுவையான, போஷாக்கு மிக்க பாலைத் தருகிறது. அதேபோல, உனது புலன்களின் வழியே நீ பெறும் அனுபவங்கள் நீ இனிமையும் கருணையும் கொண்டவனாக மாற உதவட்டும். தூய பக்தியோடு உனது வாழ்க்கையை அமைதியாக, ஆனந்தமாக வாழ்.

- சுவாமியின் அருளுரை, செப்டம்பர், 1958.