Wednesday, January 1, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 14

பிரபஞ்சம் படைத்தவன் பெருமை யாரே அறிவர்!



அண்ட சராசரம் ஆக்கி அதிலிடம்
கொண்டபல் கோள்களும் தாரகைக் கூட்டத்தின்
மண்டலமும் நீண்டிடும் வானியல் பாட்டையில்
எண்ணற் கரியன எண்ணில செய்தனன்
அண்ணல் அழகன் அறிவன் பெருமைகள்
திண்ணமாய் யாவும் தெரிந்தவர் யாருளார்?
விண்ணவர் வேந்தனை வேண்டுவர் காந்தனை
பண்ணிசை பாடிப் பரவேலோ ரெம்பாவாய்!     (பாடல்-14)

அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து, அதிலே சிந்தனைக்கும் எட்டாத கிரகங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் வானப்பாதையிலே கணக்கில்லாமல் படைத்தவனான சாயியின் பெருமைகள் முழுவதையும் யாரே நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறார்!

அழகனும் அறிவின் இருப்பிடமும் தேவர்களின் சக்ரவர்த்தியும், தன்னை விரும்புவோரைக் கவர்ந்திழுப்பவனுமான அண்ணலை, இசைப்பாடல் பாடித் தொழுவோம் வாரீர்!

No comments:

Post a Comment