Showing posts with label சத்தியம். Show all posts
Showing posts with label சத்தியம். Show all posts

Monday, January 13, 2014

ஸ்ரீ சத்திய சாயி பாவைப் பாமாலை - பாடல் 30

சத்திய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சை தருபவன்!




சத்தியம் தர்மம் சரதமாய்ச் சாந்தியும்
நித்ய பிரேமை நிரம்பு மகிம்சையும்
இத்தரை மீதினில் எல்லோர்க்கும் தந்திடும்
சத்திய சாயியைச் சந்தத் தமிழாலே
பத்தன் மதுரன் பணிவுடன் பாடிய
தித்திக்கும் பாவையைச் செப்புவா ரெல்லாரும்
முத்தியும் செல்வமும் சித்திக்கப் பெற்றிடுவார்
சுத்தனைப் பாடிச் சுகித்தேலோ ரெம்பாவாய்!     (பாடல்-30)

சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றை பூமியில் வாழும் எல்லோருக்கும் தரவந்தவன் சத்திய சாயி.

அவனைச் சந்தமிகுந்த தமிழாலே பக்தனான மதுரபாரதி மிகப் பணிவோடு பாடிய இனிக்கின்ற இந்தச் ‘சாயி திருப்பாவை’யை ஓதுகின்ற யாவரும், மறுமையில் முக்தியும், இம்மையில் செல்வங்கள் நிரம்பிய வாழ்வும் பெறுவார்கள்.

அப்படிப்பட்ட தூயவனைப் பாடிச் சுகமடைவோம் வாரீர்!