Thursday, January 10, 2019

மேம்போக்கான விடைகளும் அனுபவத்தின் குரலும்



ஒரு நேர்காணலின் போது சுவாமி, “கடவுள் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். பல சகோதரர்கள் பதில் கூறினர். ஒருவர் “சுவாமி கடவுள் எனக்குள் இருக்கிறார்” என்று கூறினார். “ஓ அப்படியா? அப்படியானால் நீ ஏன் புட்டபர்த்திக்கு வருகிறாய்? எதற்காகச் சுவாமியைப் பார்க்க வருகிறாய்?” என்று சுவாமி சீண்டினார். சகோதரரால் பதில் சொல்ல முடியவில்லை. சுவாமி “பங்காரு, உன்னிடம் எண்ணம், சொல், செயல் இவற்றின் ஒருமைப்பாடு இருக்கவேண்டும். உனக்குள் சுவாமி இருக்கிறார் என்பதோடு அதை நீ உணரவும் வேண்டும். அந்த அனுபவத்துக்குப் பின்னால்தான் நீ அப்படிக் கூறமுடியும். இல்லையென்றால் அது போலி நடிப்புதான்” என்று கூறினார்.

அனுபவத்தின் குரலில்தான் நாம் பேசவேண்டும் என்பதை நாங்கள் அதிலிருந்து புரிந்துகொண்டோம். இல்லையென்றால் அது பாசாங்கு. சுவாமி கூறுவதன் உட்பொருளைப் புரிந்துகொள்ள (அந்தப் பொருளின் அனுபவமே சுவாமிதான்) அவரது போதனைகளை நாம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். நாம், குறிப்பாக இளைஞர்கள், வெளிநோக்கிய போக்குக் கொண்டிருப்பதால், நாம் செயல்படுவதை - புறச்செயல்பாட்டை = நோக்கியே சாய்கிறோம். பகவானின் போதனைகளை மையமாகக் கொண்டு, அதையே ஆழ்ந்து சிந்தித்து, அதைச் (சிரமப்பட்டாவது) செயலில் கொண்டுவருவதுதான் சாதனைப் பாதை ஆகும். அந்தப் பாதையில்தான் சுவாமி நாம் நடக்கவேண்டும் என விரும்புகிறார்.

பகவான்! எங்கள் திசையை மாற்றியமைக்கு நன்றி. இவற்றைப் பின்பற்றுவதற்கான பலத்தை நீங்கள்தான் கொடுக்கவேண்டும். இந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற எங்களுக்கு ஆற்றல், அறிவு, விழிப்புணர்வு ஆகியவற்றைத் தாருங்கள். நன்றி, ஜெய் சாய்ராம்.

நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2018

No comments:

Post a Comment