Tuesday, January 8, 2019

ஸ்ரீ சத்ய சாயி கிளிக்கண்ணி



பர்த்தி புரீசனடி பிரசாந்தி வாசனடி
பக்தர்தம் நேசனடி - கிளியே 
பாப விநாசனடி.

சொன்ன சொல் எல்லாம் வேதம், வாய் திறந்தாலே கீதம்
பார்வையில் கிட்டும் போதம் - கிளியே 
பவவினை ஓடும் காதம்  (பர்த்தி)

அன்னமென நடந்தான் அன்பெனும் அமுதம் தந்தான்
மன்னவன் பதம் பற்றினால் - கிளியே 
மட்டிலா ஆனந்தந்தான்  (பர்த்தி)

தேடாததெல்லாம் தேடி ஆசைகள் பின்னே ஓடி
அலுத்தபின் அண்ணல் வந்தான் - கிளியே 
அமைதியைத் தந்தானடி  (பர்த்தி)

மிருககுணம் தவிர்த்து மனிதராய்ப் பரிணமித்து
வாழ வழிகாட்டினான் - கிளியே 
வணங்கிடு கை குவித்து!  (பர்த்தி)

மானவ சேவை ஒன்றே மாதவ சேவை என்றே
கோனவன் நெறி காட்டினான் - கிளியே 
கொடுப்பினை செய்தோம் நன்றே!  (பர்த்தி)

எல்லோரும் என் குடும்பம் என்றபின் ஏது துன்பம்
வல்லானின் பாதம் பற்றி - கிளியே 
வாழுதல் புவியில் இன்பம்  (பர்த்தி)

விதுரனின் கூழ்குடித்தான், பொற்சபையில் நடித்தான்
சதுரனெம் சாயிவந்தான் - கிளியே
கலியதன் கதை முடித்தான்!  (பர்த்தி)

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தமே - கிளியே 
ஐயன் பாதாரவிந்தமே!   (பர்த்தி)

No comments:

Post a Comment