Friday, June 14, 2013

சனாதன சாரதி - தமிழ்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை, உபதேசங்கள், பக்தர்களின் அனுபவங்கள், ஆன்மீக வினா-விடை (பகவானே அருளியவை) என்று பலவற்றையும் தாங்கித் தமிழில் வெளிவருகிறது சனாதன சாரதி.

முதல் இடுகையிலேயே கூறியபடி, சற்றேறக்குறைய 1953ஆம் ஆண்டு முதல் சுவாமி பொதுவில் சொற்பொழிவுகள் நிகழ்த்தத் தொங்கினார். தனது பேச்சுக்கள் மேடைப்பேச்சுக்கள் அல்ல, உரையாடல் என்று சுவாமி கூறுவார். மிகக் கடினமான வேதாந்தக் கருத்துக்களையும் அவர் எளிய மொழியில், உதாரணங்களோடு பொருத்திக் கூறுகையில், தனக்காகவே அவர் விளக்கியது போலப் பெருங்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்.

அப்படி இரண்டு அருளுரைகள் ஒவ்வோர் இதழிலும் வெளியாகின்றன. இவை தவிர மேலே கூறிய அம்சங்களும் உண்டு. உலகெத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் தமிழ் சனாதன சாரதியைச் சந்தா கட்டிப் பெறமுடியும்.

சந்தாத் தொகை:

இந்தியாவுக்குள்:

ஒரு வருடம்          - ரூ.  60.
இரண்டு வருடம்  - ரூ. 120.
மூன்று வருடம்    - ரூ. 180.

வெளிநாடுகளில்:

ஒரு வருடத்துக்கு

அமெரிக்க டாலர் - 19. (இந்திய ரூ. 850)

சந்தாத் தொகைக்கான காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் ஆகியவை ‘Sri Sathya Sai Books & Publications Trust - Tamil Nadu’ என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து DD அல்லது மணி ஆர்டர் மட்டுமே ஏற்கப்படும்.

மணி ஆர்டர் அனுப்புபவர்கள் தமது முழு முகவரியைத் தெளிவாக எழுதி அனுப்பவேண்டும்.

சந்தாத் தொகை அனுப்பவேண்டிய முகவரி:

ஸ்ரீ சத்ய சாய் புக்ஸ் & பப்ளிகேஷன்ஸ் டிரஸ்ட் - தமிழ்நாடு
7, சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை - 600028

Sri Sathya Sai Books & Publications Trust - Tamil Nadu
7, Sundaram Salai, Raja Annamalaipuram,
Chennai - 600028
Tamil Nadu,
INDIA

e-Mail: sssbpttn2010@gmail.com
Phone: 044 24346255

No comments:

Post a Comment