Saturday, November 26, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 1

                                                             ஓம் ஸ்ரீ சாயிராம்

வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை
  வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை
மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள்
  மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே
நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன்
  நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லை
சாயியெனச் சந்ததமும் சொல்லற் கருள்வாய்
  சத்தியனே நித்தியனே சாந்தப் பொருளே!

No comments:

Post a Comment