அன்பென்னும் சூரியனே அன்பின் ஊற்றே
  அன்பென்ற மணம்வீசும் தென்றல் காற்றே
அன்பர்க்கும் அல்லார்க்கும் அன்பே தந்து
  அறவழியில் சேர்க்கின்ற ஐயா! எம்போல்
வன்பாறை நெஞ்சத்தார் தமையும் அங்கோர்
  வார்த்தையிலே உருக்குகிற வாஞ்சைக் கடலே
அன்பெந்தன் வடிவென்ற பர்த்தீச் சுரனே
  அருளமுதே ஆரணனே அமுதுக் கமுதே!
 
 
No comments:
Post a Comment