Tuesday, November 29, 2016

அருள்மொழி: நிரந்தர ஆனந்தத்தின் விலை



இவ்வுலகில் எதை அடையவேண்டுமானாலும் அதற்கு ஒரு விலை தரவேண்டும். ஒரு கடையில் கைக்குட்டை வாங்க விரும்பினால் அதற்கு 10 ரூபாய் கொடுக்கவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொடுக்காமல் நீ கைக்குட்டையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தற்காலிகமான பொருளுக்கே நீ விலை தரவேண்டும் என்றால், நிரந்தர ஆனந்தத்துக்கும் தக்க விலை தரவேண்டும் என்பது இயற்கைதானே? புனிதமானதும், என்றும் புதியதும், தெய்வீகமானதுமான அன்பே அதன் விலை. இது உலகியலான அன்பல்ல. இந்த அன்பு எப்போதும் ஒன்றிணைப்பது, மேடு பள்ளம் இல்லாதது, தேய்வும் வளர்ச்சியும் இல்லாதது. இது எப்போதும் கொடுக்கும், ஒருபோதும் வாங்காது. உலகியல் அன்புக்கும் தெய்வீக அன்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எல்லோரும் உணரவேண்டும். உலகியல் அன்புக்கு வாங்கிக்கொள்ளத்தான் தெரியும், கொடுப்பதே இல்லை; ஆனால் தெய்வீக அன்போ கொடுத்துக்கொண்டே இருக்கும், வாங்கிக்கொள்வது இல்லை.

- பாபா, சாயிஸ்ருதி, கொடைக்கானல், 29/04/1997

No comments:

Post a Comment