Monday, November 28, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 4


அங்கியினை மேலேற்றி அங்கை கீழாய்
  அழகாகச் சுற்றியபின் அதனில் பாங்காய்ப்
பொங்கிவரும் பூதியினைத் தருவாய், தந்தே
  போக்கிடுவாய் போகாத நோய்கள் கூட!
வெங்கதிரின் ஒளியோனே! விரிந்த அண்டம்
  விதமாகச் சமைத்தோனே, வேதப் பொருளே!
சங்கரனே சக்கரனே படைப்பின் தேவே!
  சாயீசா பர்த்தீசா தருவாய் பாதம்!

அருஞ்சொற்பொருள்:
பூதி - விபூதி;
சக்கரன் - சுதர்சன சக்கரம் ஏந்திய விஷ்ணு;
படைப்பின் தேவு - பிரம்மன்

No comments:

Post a Comment