Sunday, November 27, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 2



இணங்காரை நண்பரென எண்ணிக் கொண்டு
  இல்லாத செல்வத்துக் கேங்கிக் கொண்டு
நிணந்தன்னை உணவென்று நித்தம் தின்று
  நெறியில்லா நெறிநின்று நெஞ்சில் அதனை
வணங்காத சுதந்திரமென்(று) இறுமாப் புண்டு
  வாழுகிறோம்! வந்தாய்நீ எம்மைக் காக்க!
மணம்வீசும் மலர்சூழும் பர்த்தீச் சுரனே
  மலர்ப்பாதம் தரவேணும் மாந்தர்க் கரசே!

No comments:

Post a Comment