Tuesday, November 29, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 6



ஆமென்றால் ஆமாமாம் என்றே மும்மை
  ஆமோதித் தருளிடுவேன், இல்லை என்றே
காமங்கொள் ஆணவத்தால் கருது வோர்க்கே
  கரந்துள்ளே நிற்பதுவதும் யானே என்பாய்!
நாமத்தை வாயாலே சொல்லிப் பாடி
  நாள்தோறும் துதிப்போருக்(கு) இங்கும் அங்கும்
சேமத்தைத் தருவோனே, பர்த்தீச் சுரனே
  சீவனையே சிவனாக்கத் தோன்றிட் டாயே!

அருஞ்சொற்பொருள்: 
ஆமாமாம் -> ஆம், ஆம், ஆம் (yes, yes, yes - Swami said)
இங்கும் அங்கும் -> இம்மையிலும் மறுமையிலும்

No comments:

Post a Comment