Thursday, December 1, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 7

                             
                                                 ஓம் ஸ்ரீ சாயிராம்

யா(ன்)நீயே நீநானே என்னு முண்மை
  எமதறிவிற் கெட்டாத காரணத்தால்
வானேயும் வைகுந்தம் தன்னை நீங்கி
  வந்தாய்நீ மானுடனாய் வேடம் பூண்டு
தேனான மொழியாலே மீண்டும் மீண்டும்
  தெளிவாய்நீ சொன்னாலும் தெளியோம் நாங்கள்!
கோனே!நற் கற்பகத்தின் கொம்பே, பர்த்திக்
  கொடுஞ்சாபம் தீர்த்தோனே கொள்கைக் குன்றே!

No comments:

Post a Comment