Saturday, December 10, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 4


அறியாமை இருளில் மூழ்கி, 
 அழிகின்ற சொத்து நாடி,
சிறிதான இன்பம் எல்லாம் 
 பெரிதென்று கொண்டு தேடி,
முறையல்ல செய்து வாடும்
 மூடத்தனத்தை மாற்றும்
நிறைபாதம் போற்று கின்றோம்,
 பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
எந்தெந்த சொத்துக்கள் நிரந்தரமல்லவோ அவற்றைத் தேடிச் சேர்க்கவும், அற்பமான இன்பங்களைப் பேரின்பம் எனக் கருதி அவற்றைத் தேடிப் பின்னே ஓடவும் செய்கின்ற மூடத்தனமான முயற்சிகள் எல்லாம் எமது அறியாமை என்னும் இருள்தன்மையால் உண்டாவன ஆகும். நிறைவான உமது பாதங்களே அத்தகைய அறியாமையை மாற்ற வல்லவை என்று போற்றுகிறோம், பர்த்தீசனான எம் ஞானகுருவே!

No comments:

Post a Comment