Thursday, December 1, 2016

ஸ்ரீகிருஷ்ணர் எங்கிருக்கிறார்?



“என்னையன்றி வேறெவரையும் தொழாமல் எவன் இருக்கிறானோ அவன் என்னோடு இருப்பான்; அவனது பாரத்தை நான் எந்நாளும் சுமப்பேன்” என்றும், “என்னையே நினைத்தபடி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடு” என்றும் ஸ்ரீமத் பகவத்கீதை கூறுகிறது.

‘நான்’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறும் அவர் உனக்கு வெளியேயோ, உனக்குப் புறம்பாகவோ இருப்பவரல்ல. அது உன்னுடைய தெய்வீக மெய்நிலைதான். நீ தியானத்தின் பூரண அமைதிநிலையில், உனது புலன்கள், மனம் மற்றும் அகங்காரத்தை இழுப்பை அகற்றி உணர்வுகளைத் தடுத்த நிலையில், நீ உனக்குள்ளே அதனை இனங்காண்பாய். பகவான் தன்னைச் சாரதியாக அமர்த்திக்கொண்டுள்ள உனது இதயபீடத்தின் குளிர்ந்த அமைதியில் நீ சரண்புகுந்து கொள்ளலாம்.

- ஸ்ரீ சத்திய சாயிபாபா, பிரசாந்தி நிலையம், 23/11/1975

No comments:

Post a Comment