Thursday, December 8, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 2


மலிதீது மாந்த ரிடையே
  மகதேவன் இல்லை யெனவே
ஒலிமீறி ஓங்கி எழவும்
  உளனிங் கெனாதுன் அருளால்
கலிகால மதனில் கடிதே
  காப்பாற்ற வந்த இறையே!
பொலிபாதம் போற்று கின்றோம்,
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
மனிதர்களிடையே தீக்குணங்கள் அதிகரித்து, பேரிறைவன் என்பவனே ஒருவனில்லை என்பதான இரைச்சல் அதிகரித்துப்போன இந்தக் கலிகாலத்தில், “இதோ நான் இருக்கிறேன்” என்று பெருங்கருணையோடு விரைந்து அவதரித்து எம்மைக் காப்பாற்றுவதற்கென வந்த பர்த்தீசனான ஞானகுருவே, உனது ஒளிமிகுந்த பாதங்களைப் போற்றித் தொழுகிறோம்.

No comments:

Post a Comment