Friday, December 2, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 8



                                     
                                               ஓம் ஸ்ரீ சாயிராம்

பேசாரும் பேசிடுவர் நின்கண் நோக்கில்
  பெருநோய்கள் கொண்டாரும் பிணிநீங் கிடுவார்!
கூசாமல் பழிப்போர்க்கும் கோபம் இன்றிக்
  குறுநகையே விடையாகத் தருவாய் தேவே!
மாசான ஆணவமாம் மலத்தை நீக்கி
  மாயைதனைக் கர்மத்தை முற்றும் போக்கி
தேசான ஞானத்தைத் தருவாய் போற்றி!
  தேவர்க்கும் அரிதான சாயி போற்றி!

No comments:

Post a Comment