Saturday, December 3, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 10


                                                   ஓம் ஸ்ரீ சாயிராம்

எம்மையெம் மிடமிருந்தே காப்போன் நீயே!
  எல்லார்க்கும் எல்லாமும் ஆவோன் நீயே!
இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் நீயே!
  ஏழிசையில் நாதமென நின்றாய் நீயே!
செம்மைக்குள் சேர்கின்ற செய்யோன் நீயே!
  சிறுமதியைத் தீய்க்கின்ற சீரோன் நீயே!
அம்மையென அப்பனென ஆனோன் நீயே!
  ஆரறிவார் நின்புகழைச் சாயீ முற்றும்!

(பர்த்தீச்சுரன் பதிகம் முற்றும்)

No comments:

Post a Comment