Saturday, December 3, 2016

பர்த்தீச்சுரன் பதிகம் - 9


                                             ஓம் ஸ்ரீ சாயிராம்

கொண்டமரின் வழிவந்தாய் ஈஸ்வ ராம்பா
  கும்பிக்குள் ஒளிப்பந்தாய் குடியே றிட்டாய்!
அண்டையிலே கர்ணத்தின் இல்லம் போந்தாய்,
   அன்னைபல ராவதெதும் புதுமை யன்றே!
வண்டமரும் தாமரையாய்ப் பாதம், கண்கள்,
  வணங்கியவர் வாழ்வுக்குப் பொறுப்பை ஏற்றுக்
கொண்டதிருக் கைகளிவை கொண்டோய் வாழி!
  கொடுப்பதுவே கொள்கையெனக் கொண்டாய் சாயீ!


குறிப்புகள்:
கொண்டமரின் வழி வந்தாய் - கொண்டமராஜு அவர்களின் பேரனாகத் தோன்றினாய்
கர்ணம் - கர்ணம் சுப்பம்மா, அண்டை வீட்டுக்காரர்

No comments:

Post a Comment