Wednesday, December 7, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம் - 1


                                                   ஓம் ஸ்ரீ சாயிராம்

வேதார விந்தன் விடையன் 
 மேவிப் பிணைந்த வடிவே
ஆதார மூலப் பொருளே 
  அளவற்ற ஞானத் திருவே
ஓதா துணர்ந்த ஒளியே 
  உயர்பர்த்தி வந்த உயர்வே
பாதார விந்தம் பணிவோம் 
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்:
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுளரும் ஒன்றாகிய வடிவம் கொண்டோனே, பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரமானவனே, எல்லையற்ற ஞானச்செல்வனே, கல்வி கற்பதற்கே அவசியமின்றி அனைத்துமறிந்த ஒளிபொருந்திய அறிவை உடையோனே, புட்டபர்த்தியில் அவதரித்த மேலான பொருளே, உனது பாத கமலங்களைப் பணிகிறோம், எமது ஞானகுருவாகிய பர்த்தீசனே!

குறிப்பு:
வேதாரவிந்தன் விடையன் - வேதா (பிரம்மா), அரவிந்தன் (திருமால்), விடையன் (ரிஷபம் ஏறிய சிவபெருமான்)

No comments:

Post a Comment