Thursday, December 15, 2016

பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-5


கேதாரம் பத்ரி காசி 
  கயிலாயம் திருவை குந்தம்
போதாதெனக் கருதி தானோ 
  பூமண்டலத்தில் நீ இன்று
மாதீஸ்வ ராம்பா மடியில் 
  மகனாக வந்து பிறந்தாய்
பாதார விந்தம் பணிவோம், 
  பர்த்தீச ஞான குருவே!

பொருள்: கேதாரநாத், பத்ரி, காசி, கைலாயம், திருவைகுண்டம் என்று இந்தப் புனிதத் திருப்பதிகள் போதாது, (பூமியில் மற்றுமோர் ஒப்பற்ற திருப்பதியை உண்டாக்குவோம் என்று கருதி) நீ மாதர்க்கரசி ஈஸ்வராம்பாவின் மடியிலே வந்து மகனாகப் பிறந்திட்டாயோ! (அத்தகைய மற்றுமோர் தலமான) பர்த்தியில் ஈசனாக வந்து பிறந்த எமது ஞானகுருவே, உமது பாதங்களைப் பணிகின்றோம். 

No comments:

Post a Comment