பர்த்தீச்சுரன் பதிகம் - 5
ஆண்களிடை ஆணானாய், அரிதாம் பக்தி
  அதுகொண்ட பெண்களிடை பெண்ணாய் ஆனாய்
தேன்மழலைக் குழவியிடை குழந்தை ஆனாய்
  சிவசக்தித் தத்துவமே தெய்வம் ஆனாய்!
வேணுமட்டும் விழிநிறையப் பருகி யுள்ளம்
  விம்மிடவே பேரெழிலோ டெம்முன் வந்தாய்
பூணுமருள் பொக்கிஷமே பொய்யா மொழியே
  போற்றுகிறோம் பர்த்தீசா பொற்பின் வெற்பே! 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment