Wednesday, June 19, 2019

அச்சமறு பதிகம் - 1



நோய்க்கஞ்சேன் நொடித்துப் பழிபேசும்
வாய்க்கஞ்சேன் நள்ளிரவில் நட்டமிடும்
பேய்க்கஞ்சேன் அஞ்சலென் றுரைசாயி
வாய்க்கஞ்ச மலர்கண்ட பரிசினாலே!

பொருள்
சாயீசன் தனது தாமரை வாயினைத் திறந்து “அஞ்சாதே” என்றெமக்குக் கூறிய விதத்தினால் தைரியம் கொண்டுவிட்ட நான் இனி நோய்களுக்கு அஞ்சமாட்டேன், என்னைக் குறித்து முகத்தை நொடித்தபடி பழி பேசுகிற ஊராரின் வாய்க்கும் அஞ்சமாட்டேன், நடு இரவினில் தலைவிரித்து ஆடுவதாகக் கூறப்படும் பேயே வந்தாலும் இனி அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற் பொருள்
வாய்க்கஞ்ச மலர் - வாய் + கஞ்சமலர் -> வாயாகிய தாமரைப்பூ
பரிசினாலே -> விதத்தினால், தன்மையினால்

மதுரபாரதி

No comments:

Post a Comment