Thursday, June 20, 2019

அச்சமறு பதிகம் - 2


பார்க்கஞ்சேன் வளிதீ வானமினும்
நீர்க்கஞ்சேன் நெஞ்சநிறை ஆசைகளின்
போர்க்கஞ்சேன் புகலிடமாய்ச் சாயீசன்
சீர்க்கஞ்ச மலர்ப்பாதம் சேர்ந்ததாலே!

பொருள்
சாயீசனின் அழகிய தாமரைப் பாதங்களே தஞ்சமென அடைந்துவிட்ட காரணத்தால்,  பஞ்சபூதங்களாகிய நிலம், தீ, நீர், காற்று, வானம் என்ற எவற்றுக்கும் அஞ்சமாட்டேன். மனதில் நிறைந்து போராடுகின்ற ஆசைகளுக்கும் (அவற்றை என்னால் வெற்றிகொள்ள முடியும் என்ற காரணத்தால்) அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்
வானமினும் -> வானம் + இ(ன்)ன்னும், வானம் மற்றும்
சீர்க்கஞ்ச மலர் -> சீர் + கஞ்ச மலர் ->அழகிய தாமரைமலர் 

No comments:

Post a Comment