Friday, June 21, 2019

அச்சமறு பதிகம் - 3


கலிக்கஞ்சேன் காலனுக் கஞ்சுகிலேன்
புலிக்கஞ்சேன் பொல்லார்க்கு மஞ்சுகிலேன்
சிலிர்க்கின்ற செழுங்கேசச் சாயீசன்
பிலிற்றுந்தேன் மலர்ப்பாதம் பிடித்ததாலே!

பொருள்
சிலிர்த்து நிற்கும் செழுமையான கேசத்தைக் கொண்ட சாயீசனின் தேன் ததும்பும் மலர்போன்ற பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தால், நான் இனி கலிபுருஷனுக்கு அஞ்சமாட்டேன், எமனுக்கும் அஞ்சமாட்டேன், புலிக்கு (அதுபோன்ற கொடிய மிருகங்களுக்கு) அஞ்சமாட்டேன், பொல்லாத மனிதர்களுக்கும் அஞ்சமாட்டேன். 

No comments:

Post a Comment