Thursday, June 27, 2019

அச்சமறு பதிகம் - 5



சாலத்துக் கஞ்சிடேன் சமரஞ்சேன்
ஞாலத்துக் கஞ்சிடேன் நாளஞ்சேன்
கோலத்துக் கொழுஞ்சிகை சாயீசன்
சீலத்துத் திருவடி சேர்ந்ததாலே

பொருள்

அழகாக அமைந்த அடர்ந்த சிகை உடையவனான சாயீசனின் சீலமிக்க திருவடிகளில் தஞ்சமடைந்துவிட்ட காரணத்தினால் நான் (ஏமாற்று வேலை செய்வோரின்) ஜாலங்களுக்கு அஞ்சமாட்டேன், போர்க்களத்துக்கும் அஞ்சமாட்டேன், உலகத்துக்கு அஞ்சமாட்டேன், (அட்டமி நவமி என்பன போன்ற) நாட்களுக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

சாலம் - ஏமாற்று வேலை;
ஞாலம் - உலகம்
கொழுஞ்சிகை - அடர்ந்த தலைமுடி 

1 comment:

  1. அருமையான கவிதை. சாய்ராம்

    ReplyDelete