Monday, June 24, 2019

அச்சமறு பதிகம் - 4


பனிக்கஞ்சேன் பரிதியின் சூடஞ்சேன்
சனிக்கஞ்சேன் நவகோள் தமக்கஞ்சேன்
தனிக்கஞ்ச மலர்நாட்டச்  சாயீசன்றன்
இனிக்கின்ற எழிற்பாதம் பிடித்ததாலே!

பொருள்

இணையற்ற தாமரைமலர் போன்ற பார்வை கொண்ட சாயீசனின் இனிய, அழகிய பாதங்களைப் பற்றிக்கொண்ட காரணத்தினால், பனிவிழும் குளிருக்கோ, கதிரின் வெம்மைக்கோ அஞ்சமாட்டேன். சனி உட்பட்ட நவக்கிரகங்களின் பார்வைக்கும் அஞ்சமாட்டேன்.

அருஞ்சொற்பொருள்

தனிக் கஞ்ச மலர் -> ஒப்பற்ற தாமரைப்பூ
நாட்டம் -> பார்வை

No comments:

Post a Comment