Friday, October 12, 2018

ஆலிவர் கிராம்வெல்லின் இறுதிப் புரிதல்



ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தின் ராணுவ தளபதியாக இருந்தவர். மிகவும் புத்திசாலி அரசியல்வாதியும்கூட. தனது நண்பர்களுக்காக அவர் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தார். மக்களிடம் வோட்டு வாங்கவும் ஏராளமாகச் செலவழித்தார். அவருடைய இறுதிக்காலம் வந்தபோது அவர், “சீ! என் உடல், பொருள், காலம், ஆற்றல் அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தினேன். நான்மட்டும் இவற்றையெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்தால், எத்தனை மகிழ்ச்சியாக இருந்திருப்பேன், எத்தனை உயர்ந்த நிலையை அடைந்திருப்பேன்! அவ்வளவு பணமும் சக்தியும் செலவழித்தபின் இதுதான் என் கதி!” என்று அவர் மனம் வருந்தினார். 

மறுபிறவி என்று ஒன்று இருந்தால் நான் அரசியல்வாதி ஆகமாட்டேன் என்று அவர் உறுதி எடுத்துக்கொண்டார்.

- பாபா, 05-09-1996

No comments:

Post a Comment