Sunday, October 7, 2018

ஸ்ரீ சத்திய சாயி அஷ்டாங்க யோக பிரகாசிகா


பதஞ்சலி யோக சூத்திரம் கூறும் அஷ்டாங்க யோக மார்க்கத்தைப் பற்றி ஆன்மீக ஆர்வலர்கள் அறிவார்கள். பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா தமது பக்தர்களுக்கு ஆற்றிய பேருரைகளில் மட்டுமல்லாமல், தான் அருளிய ‘தியானவாஹினி’ நூலிலும், மாணவர்களுக்காக நடத்திய ‘கோடைமழை’ என்கிற இந்திய ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் பற்றிய கருத்தரங்கங்களிலும் மிக விரிவாக யோக சூத்திரங்கள் பற்றிப் பேசியுள்ளார்.

பகவான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அருளிய கருத்துக்கள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்துத் தரும் அரிய ஆன்மீகக் கருவூலம் இந்த நூல். சுவாமி சிவானந்தர், சுவாமி விவேகானந்தர் உட்பட இந்த நூலை அழகாக விரித்துரைத்தோர் பலர்.

ஆயினும், யோகசூத்திரக் கருத்துக்களை நன்கு கற்றறிந்தோரும் சுவாமியின் இந்த நூலில் பல சிறப்பான, கடைப்பிடிக்கத் தக்க விளக்கங்களைக் காணுவர். இந்த விளக்கங்கள் ஆரம்பநிலை சாதகனுக்கு மட்டுமல்லாமல், முன்னேறிய சாதகனுக்கும் தெளிவைக் கொடுக்கும். ஆன்மசாதனையைத் தொடர்வதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும். நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.

இதனைப் பிரசாந்தி நிலையத்திலுள்ள Sri Sathya Sai Sdhana Trust, Publications Division வெளியிட்டுள்ளது. 

நூல் ஆங்கிலத்தில் உள்ளது. 

விலை: ரூ 80.
ஆன்லைன் புத்தக நிலையம்: Sri Sathya Sai SadhanaTrust, Publications Division
இந்த நூலை வாங்க: Sri Sathya Sai Ashtanga Yoga Prakashika
மின்னஞ்சல்: orders@sssbpt.org
  

No comments:

Post a Comment